உலக அறிஞர்களின் நேரிய பார்வையில்....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkojsjk9XtQeZC90S1AxJeGUFFWg9hymyMaJSgsdpRycy0fIo-QhIgGr4H9PxVjf5jjZ5ZZ_ufxqq_egS0T43k8gXgz0R_Is7y_BugexqlDzBAvmQXYCEulKmOD3vTH6QBYMepxL-6GhIC/s72-c/The+Best+Role+-+Model-Muhammad%28PBUN%29.jpg

வாழ்வில் அனுபவப்பட்ட அறிஞர்கள் நடுநிலையோடு சிந்தித்து ஒரு உத்தமரைப் பற்றி சொல்லும் உண்மைக் கருத்துக்கள் உலக மன்றத்தில் மறைக்கப்படாமல் இருக்க அவற்றை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிவிடுகிறது. அத்தகைய ஒரு மாமனிதரைப் பற்றிய உலக அறிஞர்களின் கருத்துக்கள் அவரைப் பற்றி மென்மேலும் அறிய ஆவல் ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு பகுதி மட்டுமே! நீங்களும் படித்து கலங்கமில்லா ஒருவரின் எதேர்ச்சையான நிலையைப் புரிந்துக் கொள்ள உங்கள் முன் இந்தப் பதிவு:
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்!மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையதுநபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
– டாக்டர் ஜான்சன் –
![]() |
Thomas Carlyle |
– தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History, 1840)
“சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த - ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!!”
– தாமஸ் கார்லைல் (Thomas_Carlyle), Heroes_and_Hero_Worship
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
– தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History)
![]() |
Annie Besant |
– அன்னி பெசன்ட் (Annie Besant) - The life and Teachings of Mohamed 1932, page 4
இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவிய ஒருவர் முஹம்மத் அவர்கள்! மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்டமுடியாது!
– லா மார்ட்டின், ஹிஸ்டரி தெலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள்/கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தாம் முஹம்மத் அவர்கள்.
– லா மார்ட்டின்(Lamartine) –
![]() |
Alphonse Lamartine |
– அல்போன்சு லாமார்ட்டின் - (Alphonse Lamartine - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)
![]() |
Diwan Chand Sharma |
– திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)
அன்பின் ஆன்மாவாக முஹம்மத் இருந்தார்.அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்க முடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.
ஆட்சி புரியும் அமைச்சர்கள் (முஹம்மது) நபிபெருமான் வகுத்த சீர்திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
– காந்திஜி –
![]() |
Gandhiji |
“மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும்போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முஹம்மது நபி நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டுவந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன.அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது!”
– மகாத்மா காந்தி – 'யங் இந்தியா’ (Young India) பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
![]() |
Michael H. Hart |
– M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)
சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான்முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
– மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.
![]() |
Bosworth Smith |
– பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
![]() |
Bernard Shaw |
– ஜார்ஜ் பெர்னாட்ஷா –
முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கமுடியும்.
– ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
![]() |
Thamizhanban |
– தமிழன்பன் –
இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர்முஹம்மதுதான்.
– என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா –
![]() |
Napoleon |
– நெப்போலியன் –
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கிவிட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல்நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
– எஸ். எச். லீடர் –
முஹம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் அவற்றிற்கு நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்! இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முஹம்மது நபி.
![]() |
C. N. Annadurai (Arignar Anna) |
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று! சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு! நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார்! அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்ட துயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி! இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
– அறிஞர் அண்ணா –
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, 'ஒருவனே தேவன்' என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறை நம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமைக் கொண்டாடிய முஹம்மது நபிஅவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
– வாஷிங்டன் இர்விங் –
![]() |
Washington Irving |
– வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.
![]() |
Edward Gibbon |
– எட்வர்டு கிப்பன் –
![]() |
Sarojini Nayudu |
– கவிக்குயில் சரோஜினி நாயுடு –
![]() |
Dr. Ambedkar |
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
– டாக்டர் அம்பேத்கார் –
![]() |
Leo Tolstoy |
– டால்ஸ்டாய் –
![]() |
William Moore |
– வில்லியம்மூர் –
இஸ்லாத்தின் நிறுவனர் (முஹம்மத் நபி) உடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
– ஜி.ஜி. கெல்லட் –
கருத்துரையிடுக